ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் விடிய, விடிய அடித்தனர்" மாஜிஸ்திரேட் பாரதிதாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.!
"லத்தி மற்றும் டேபிளில் ரத்தக்கறைகள் படிந்துள்ளன - அவற்றை அழிக்க நேரிடும்" சாட்சியம் அளித்த பெண் காவலர்.ரேவதி கூறியதாக அறிக்கையில் மாஜிஸ்திரேட் தகவல் "விசாரணைக்காக சாத்தான்குளம் காவல்நிலையம் சென்ற போது காவலர்கள் முறையாக நடந்து கொள்ளவில்லை. உடல்பலத்தை காட்டும் தொனியில் உடலசைவுகள் செய்தார்கள்.அவர்கள் பார்வை மிரட்டும் தொனியில் அமைந்திருந்தது.
குறிப்பேடு மற்றும் பதிவேடுகளை கேட்ட போது அவற்றை கொடுக்க பெரும் தாமதம் செய்தனர்.நீண்ட நேரம் கழித்து குமார் என்பவர் சக ஊழியர்களை ஒருமையில் பேசி அதட்டும் தொனியில் குறிப்பேடுகளை கேட்டார். அன்று ஒரு மணி அளவில் தான் என்னால் விசாரணையை தொடக்க முடிந்தது எனவும், 19.6.2000 முதல் எவ்வித காணொலி பதிவுகளும் கணினியில் இல்லை - எல்லாம் அழிக்கப்பட்ட நிலையில் இருந்தன. காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அந்தந்த தினம் தானாகவே அழிந்து போகும் வகையில் (settings chance) செய்யப்பட்டிருந்தது எனவும் கூறியுள்ளார்.