டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதி!!..


டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக,  ராஜீவ்காந்தி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். முதல் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்தது. இரண்டாவதாக நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரது பொறுப்புகள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சத்யேந்திர ஜெயினுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பிற துறைகளும், துணை முதல்வரிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.