திருமணம், பிறந்தநாள், வீடு குடிபுகுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது அரசு ஊழியர்கள், தங்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடமிருந்து பரிசு பெறுவதற்கு விதிமுறைகள் உள்ளன. அதன்படி, பரிசுத் தொகையாக ரூ.5,000 வரை மட்டுமே பரிசு பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தொகையை ஐந்து மடங்காக உயர்த்தி தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு கடந்த வருடம் அறிவித்து தற்போது செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
அதே போல் தமிழக அரசு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் துறை வெளியிட்ட அரசாணையில், உறவினர்கள், நண்பர்களிடமிருந்து திருமணம், பிறந்தநாள், மதம் சார்பிலான பண்டிகைகள், இறுதிச் சடங்கு போன்றவற்றிற்குப் பரிசாக ரூ.25,000 வரை பெற்றுக் கொள்ளலாம்.
சம்பள கணக்கு வைத்திருக்கும் வங்கியிலும் இதைப்பற்றி கேட்டறியலாம்.