கடைமடைக்கு வந்து சேர்ந்த காவிரி நீர்! விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு..


டந்த 8 ஆண்டுகளாக கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி பொய்த்துப் போனது. இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதியான நாகை மாவட்டம் இறையான்குடி கிராமத்தின் பாண்டவையாற்றின் தடுப்பணைக்கு வந்து சேர்ந்தது. 


தடுப்பணைக்கு ஆர்ப்பரித்து வந்த காவிரி நீரை பொதுமக்களும் விவசாயிகளும் மலர் மற்றும் நெல்மணிகள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். மேலும், பெண்கள் கும்மி அடித்தும், பாடல்களைப் பாடியும் உற்சாகமாக காவிரியை வரவேற்றனர்.