இந்தியா Vs சீனா - மோதல் - பேச்சுவார்த்தை

   ந்திய சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை.



   சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சினை மே 5ஆம் தேதி, இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டை மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

250-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள்  பங்காங் சோ என்ற இடத்தில் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. 

 

    மே 9 ஆம் தேதி வடகிழக்குப் பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களிடையே மீண்டும் சிக்கிமின் நகுலா பாஸ் என்ற இடத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து கிழக்கு பகுதியில் சீனப் படைகள் பலமுறை வரம்பு மீறலில் ஈடுபட்டதாக இந்தியா குற்றம் சாட்டியது. இதனைத்  தொடர்ந்து கடந்த வாரம் இரு நாடுகளின் உள்ளூர் தளபதிகள் இடையே 5 முறை பேச்சுவார்த்தை நடந்தது. கேல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா அத்துமீறி தன்னுடைய கூடாரங்கள் மற்றும் படைகளை குவித்து வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

 

 சீனாவின் நடவடிக்கைக்கு, பதில் நடவடிக்கையைத் தொடங்கியிருப்பதாக ஜூன் 3ஆம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

 

  இதனிடையே எல்லை பிரச்சனையை சுமூகமாக தீர்க்க இரு நாடுகளின் வெளி விவகாரங்களுக்கான இணை செயலாளர்கள் மட்டத்தில் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆக்கபூர்வ முறையில் பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண  இதில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லடாக் பகுதிக்கு அருகே உள்ள சீனாவின் மோல்டோ என்கிற பகுதியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், இந்தியாவின் சார்பாக 14 வது படைப் பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் சீனாவின் தெற்கு ஜின்சியாங் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் லியூ லின் ஆகியோர் பங்கு பெறுகின்றனர்.