மதுரையில் சிறுமி பாலியல் வன்கொடுமை - இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!!!


துரை சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 22). இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் தாய் அவரின் வீட்டுக்கு சென்று, தனது மகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். 


இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி மாயமாகியுள்ளார். பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்த பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து விசாரணை நடத்திய போலீசார் 2 நாட்கள் கழித்து சிறுமியை மீட்டனர். அப்போது சதீஷ் சிறுமியை கடத்தியதும், பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சதீஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.