வெட்டப்பட இருந்த இரட்டை மரம்!! காப்பாற்றிய இளைஞர்கள்


ரியலூர் மாவட்டம் நக்கம்பாடி கிராமத்தில் விவசாயி ஒருவரின் நிலத்தில் அரச மரத்துடன் இணைந்த பனை மரம் ஒன்று இருந்துள்ளது. அவர் அந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக அம்மரத்தினை அப்புறப்படுத்துவதாக இருந்தார்.


இதையறிந்த சோலைவனத்து இளைஞர்கள் அம்மரத்தைக் காப்பாற்றும் விதமாக மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு அம்மரத்தை மாவட்டக் காவல்துறை அலுவலக வளாகத்தில் வைக்க அனுமதி கேட்டிருந்தனர்.



நக்கம்பாடி ஊர் தலைவரின் உதவியோடு அம்மரத்தை ஜேசிபி மூலம் வேரோடு பிடுங்கி அதன் கிளைகளையெல்லாம் அகற்றி அம்மரத்தை பொக்லைன்  எந்திர வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்று மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நட்டனர்.


சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கும் அரை நூற்றாண்டு காலமாக வாழ்ந்த மரத்தை அரை மணி நேரத்தில் இயந்திரங்களால் வெட்டி விடுவதால்,  மரங்களைக் காப்பாற்ற நாங்கள்  ஒரு குழுவாக இணைந்து செயல்படுகிறோம் என சோலைவனத்து இளைஞர்கள் கூறினர். 


இவர்களின் இந்த ஆக்கப்பூர்வ முயற்சியை அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் வெகுவாக பாராட்டினார்.