ராஜ் டி.வி.யின் மூத்த ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு!! கொரோனாவுக்கு பலியான முதல் ஊடகவியலாளர்..


மிழ் தொலைக்காட்சி சேனலான ராஜ் தொலைக்காட்சியில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வேல்முருகன் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று (26-ம் தேதி) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த முதல் ஊடகவியலாளர் வேல்முருகன் ஆவார்.


அவரது மரணத்திற்கு பத்திரிகையாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.