சென்னையில் கொரோனா முதல் முறையாக 2,000ஐ கடந்த பாதிப்பு!!


மிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86,224 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் குணமடைந்தவர்கள் 33,441 பேராக அதிகரித்துள்ளனர். தற்போது 21,681 பேர் கொரோனா சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 846 பேராக உயர்வடைந்துள்ளது.



 

சென்னையில் கொரோனா முதல் முறையாக 2,000ஐ கடந்த பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 2167 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 55858 ஆக உயர்வடைந்துள்ளது.