குடும்ப அட்டை‌க்கு ரூ.1000 நிவாரணம்..

கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை எட்டி வருவதால், அதிகம் பாதிப்புள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் ஜுன் 19ம் தேதி முதல் ஜுன் 30 வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.



இந்த ஊரடங்கு காலத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளிலும்‌, திருவள்ளூர்‌ மாவட்டத்தில்‌ திருவள்ளூர்‌ நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும்‌ மீஞ்சூர்‌ பேரூராட்சிகளிலும்‌ மற்றும்‌ பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும்‌ சோழவரம் ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்‌ வசிக்கும்‌ அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌ 1000 ரூபாய்‌ நிவாரணமாக வழங்கும்‌.


செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு மற்றும்‌ மறைமலைநகர்‌ நகராட்சிகளிலும்‌, நந்திவரம்‌ கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளிலும்‌ மற்றும்‌ காட்டாங்குளத்தூர்‌ ஊராட்சி ஒன்றியப்‌ பகுதிகளில்‌ உள்‌ள அனைத்து ஊராட்சிகளிலும்‌ வசிக்கும்‌ அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌ 1000 ரூபாய்‌ நிவாரணமாக வழங்கும்‌.


காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்‌ வசிக்கும்‌ அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌ 1000 ரூபாய்‌ நிவாரணமாக வழங்கும்‌.


அதேபோன்று, மேற்குறிப்பிட்ட பகுதிகளில்‌ வசிக்கும்‌ அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்‌ நலவாரிய உறுப்பினர்களுக்கும்‌ மற்றும்‌ பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும்‌ 1000 ரூபாய்‌ நிவாரணமாக அரசு வழங்கும்‌, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.