சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாத்தூர் தாலுகா செயலாளர் மனோஜ்குமார் தலைமையில், தாலுகா தலைவர் சுப்பாராஜ் முன்னிலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த மின்சார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யக்கோரியும், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்ட பணிகளை விவசாய பணிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். நீதிமன்றம் கூறியபடி சிறு,குறு விவசாயிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயை 3 மாத கொரோனா நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்